GA யாழ் மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வருகை தந்த அதிகாரிகளுக்கும் யாழ் மாவட்ட உயரதிகாரிகளுக்கு பிணையில் அதிகாரிகளுக்குமிடையி...
![]() |
GA |
யாழ் மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வருகை தந்த அதிகாரிகளுக்கும் யாழ் மாவட்ட உயரதிகாரிகளுக்கு பிணையில் அதிகாரிகளுக்குமிடையில் இடம்பெற்ற காணி விடுவிப்பு தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் ஊடகங்களுக்கு கருத்து கூற மறுத்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வருகை தந்த உயர் அதிகாரிகளுடன் யாழில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறிந்த கலந்துரையாடல் முடிவுற்றதும் ஊடகவியலாளர்கள் கலந்துரையாடலில் காணி விடுவிப்புத் தொடர்பில் ஏதும் பேசப்பட்டதா? ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வருகை தந்த அதிகாரி யார் எனக் கேட்டனர்.
அதற்கு பதில் அளிக்க மறுத்ததுடன் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வருகை தந்த அதிகாரியின் பெயரைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு தடுமாறினார்.
பின்னர் மலுப்பல் பேச்சுடன் வனவிலங்கு காணி தொடர்பில் ஆராய்வதற்காக வந்தனர் ஆராய்ந்தபின் முடிவு எட்டப்படலாம் என கூறிச் சென்றார்.
அண்மையில் தைப்பொங்கல் விழாவுக்கு யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழில் விடுவிக்கப்படாத காணிகள் விரைவில் விடுவிக்க படும் என்ற உத்தரவாதத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.