ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணியாக தேர்தலில் போட்டியிடவுள்ளன! எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேச...
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன், இன்று மதியல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலேயே இணக்கப்பாடு எட்டப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
யானை சின்னத்தில் போட்டியிடும் இடங்கள், தாமரை மொட்டில் போட்டியிடும் இடங்கள் மற்றும் பொது சின்னத்தின் கீழ் போட்டியிடும் இடங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தி, இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக அவர் கூறுகின்றார்.
ஐந்து மாவட்டங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இன்றைய தினம் நடத்தப்பட்டதாகவும், ஏனைய மாவட்டங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் காலத்தில் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டு கட்சிகளின் கூட்டணிக்கான பொது சின்னம் என்னவென்பது தொடர்பிலான பொது இணக்கப்பாடு இதுவரை எட்டப்படவில்லை என அவர் கூறுகின்றார்.
இரண்டு கட்சிகளும் எதிர்வரும் காலத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தி, பொது சின்னம் தொடர்பில் இணக்கம் எட்டப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்