பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பான பொது சொற்பொழிவொன்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழில் இடம்பெற்றது. இன்ற...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பான பொது சொற்பொழிவொன்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழில் இடம்பெற்றது.
இன்று சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் வசந்த முதலிகே, அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றிய தலைவர் சிறீதம்ம தேரர் உள்ளிட்ட மாணவர் பிரதிநிதிகளும் யாழ்ப்பாண மாவட்டத்தின் சில சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.