கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கு போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பிய ...
கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கு போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்கட்டிச்சோலையில் வசிக்கும் குறித்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினருக்கு வெள்ளவத்தையில் உள்ள முகவரிக்கு போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாடு செல்ல உதவிய குற்றச்சாட்டில் குறித்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த முன்னாள் விடுதலைப் புலிகளட உறுப்பினர் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போதே கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் போது தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் மேற்படி கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான பொலிஸ் கான்ஸ்டபிள் வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவில் கடமையாற்றியவர் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.