இனப்பிரச்சினையை பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து பிரிக்க முடியாது. நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இனப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என ஜன...
இனப்பிரச்சினையை பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து பிரிக்க முடியாது. நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இனப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் நடாத்தப்பட்ட சர்வதேச நாணய நிதியம் மற்றும் அதற்கு அப்பால் என்ற தொனிப்பொருளிலான உரையாடலில் பிரதான உரையை ஆற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி…
பசுமைப் பொருளாதாரத்திற்கான இலங்கையின் சாத்தியக்கூறுகள் நன்றாக இருக்கின்றது. இலங்கை உடனடியாக அதில் இறங்கி அதனை ஆரம்பிக்க வேண்டும்.
நாட்டின் வளங்களை அதிகமாக வீணடித்த பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அல்லது மின்சார சபைக்கு ஆதரவளிப்பதற்கு அப்பால், வரியவர்கள் மற்றும் நலிவடைந்தவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கே பணம் தேவைப்படுகின்றது.
டி.எஸ். சேனநாயக்கவின் முன்மொழிவுகளை கட்டியெழுப்பாதது மற்றும் 1965 இல் ஷெனோய் அறிக்கையை நடைமுறைப்படுத்தாதது போன்றனவே இலங்கையின் அபிவிருத்தியில் தவறவிட்ட வாய்ப்புகளாகும்.
இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையானது 1978 இல் முன்னேற்றத்தைக் குறைத்தது. மேலும் நாடு மீண்டும் தனது பழை நிலைப்பாட்டை எடுப்பதற்கான வாய்ப்பை இழந்தது.
எனினும், இலங்கைக்கு ஒரு தீர்க்கமான தெரிவை மேற்கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கான கடைசி சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது. இதனை தவறவிட்டால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு வளமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி நாட்டை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியாது.
ஐஆகு திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது. இந்த நோக்கத்தை அடைவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.