பண்டிகைக் காலத்தில், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பொலிஸாருக்கு மேலதிகமாக, புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், பாதுகாப்புக் கடமைகளில...
பண்டிகைக் காலத்தில், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பொலிஸாருக்கு மேலதிகமாக, புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலத்தில் சந்தைக்கு போலியான வர்த்தகர்கள் நுழைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாவனைக்கு உதவாத மற்றும் காலாவதியான பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன், போலி நாணயத்தாள்களும் புழக்கத்தில் விடப்படுகின்றன. அதுகுறித்து அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும்.
அதேநேரம், திட்டமிட்டவாறு திருட்டுச் சம்பவங்களின் ஈடுபடும் குழுவினரின் நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் பெறுமதியான ஆபரணங்களை அணிந்துசெல்ல வேண்டாம் என்பதுடன் பணப்பையை கவனமாக வைத்திருக்க வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டார்.