இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து, இந்திய மற்றும் அமெரிக்காவை உளவு பார்க்கும் வகையிலான புதிய ராடர் தளத்தை இலங்கையில் அமைக்க சீனா திட்டம...
இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து, இந்திய மற்றும் அமெரிக்காவை உளவு பார்க்கும் வகையிலான புதிய ராடர் தளத்தை இலங்கையில் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை உளவு துறை தரப்புக்களால் இந்த திட்டம் தொடர்பிலான தகவல் வெளிக்கொணரப்பட்டுள்ளதாக பிரித்தானிய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
சீனா இலங்கைக்கு வழங்கிய கடன்களின் மூலோபாய ஆதாய நடவடிக்கையாக இந்த திட்டம் அமைந்துள்ளதென குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தொலைதூர செயற்கைக்கோள் பெறும் தரை நிலையத்திற்கான திட்டமிடல் சீன அறிவியல் அகாடமியின் ஏரோஸ்பேஸ் இன்ஃபர்மேஷன் ரிசர்ச் மூலம் வழிநடத்தப்படுகிறது.
இந்த ராடர் தளமானது இலங்கையின் தெற்கு முனைக்கு அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அதன் இருப்பிடம், இந்தியப் பெருங்கடலில் மேற்கத்திய கடற்படைக் கப்பல்களுக்கு எதிரான உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளை சீனா பெரிதும் அதிகரிக்க அனுமதிக்கும்.
இன்னும் தீவிரமாக, டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் இராணுவ நிறுவல்களையும், இந்தியாவையும் உளவு பார்க்க சீனாவை அனுமதிக்கும்.
மேலும், இந்தியாவிலுள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தின் நடவடிக்கைகள் மற்றும் ஒடிசாவிலுள்ள ஏவுகணை சோதனைத்தளம் ஆகியனவற்றையும் குறித்த ராடர் மூலம் அவதானிக்க முடியும்.
இலங்கை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பத்தில் ஒரு பங்கு மற்றும் அதன் மொத்த வெளிநாட்டில் ஐந்தில் ஒரு பங்கு சீனாவுக்கு கடன்பட்டுள்ளது.
இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சீனா சமீபத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதை முடக்க முன்வந்தது, அதே நேரத்தில் இலங்கை IMF உடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதில் ீனாவின் ஒரு நிபந்தனை ராடார் தளத்தை உருவாக்க அனுமதி என்று கூறப்படுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.