தலைமன்னார் தனுஷ்கோடி கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி...
தலைமன்னார் தனுஷ்கோடி கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.
நேற்று (09) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,யுத்தத்துக்கு முன்பு தலைமன்னார் – தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து சேவை நடைபெற்றது. அந்த நாட்களில் கொழும்பில் இருந்து தலைமன்னாருக்கு விசேட புகையிரத சேவையும் இடம்பெற்றது.
ஆனால் தற்போது காரைக்கால் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவை நடைபெற இருப்பதாக செய்திகள் ஊடாக அறிந்தேன்.
காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் 56 கிலோ மீட்டர் தூரம் ஆனால் தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையிலாக 18 கிலோமீட்டர் தூரமே. ஆகவே தலைமன்னார் தனுஷ்கோடி கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.