எனது வார்த்தைகள் எந்த வகையிலும் உங்கள் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், அனைத்து பௌத்த பிக்குகள், பௌத்தர்கள், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள...
எனது வார்த்தைகள் எந்த வகையிலும் உங்கள் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், அனைத்து பௌத்த பிக்குகள், பௌத்தர்கள், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கூறினார்.
மிரிஹானவில் நடைபெற்ற கூட்டுப் பிரார்தனை நிகழ்வில் ZOOM ஊடாக கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது இதை குறிப்பிட்டுள்ளார்.
“நான் எந்த தவறும் செய்யவில்லை. எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும், எனது வார்த்தைகள் உங்களை எந்த வகையிலும் மனரீதியாக புண்படுத்தியிருந்தால், எனது பௌத்த சகோதரர்கள், இந்து சகோதரர்கள், முஸ்லீம் சகோதர சகோதரிகள் ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்,” என்றார்.
தாம் விரைவில் நாடு திரும்புவதாகவும், இதற்கான வழியை தற்போது அவரது சட்டத்தரணிகள் தயார் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.