யாழ்.குருநகர் இறங்குதுறை பகுதியில் கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், ஒரு கிலோ கிராம் TNT...
யாழ்.குருநகர் இறங்குதுறை பகுதியில்  கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், ஒரு கிலோ கிராம் TNT வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போதே குறித்த பொதியில் சுமார் ஒரு கிலோவும் 950 கிராமும் கொண்ட  TNT மற்றும் நூலையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
வெடிமருந்துகளைப்  பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக இந்த அதிக சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், 
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இந்த வெடிபொருட்கள் கடற்படையினரின் பாதுகாப்பில்   வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 
							     
							     
							     
							    
 
 
 
 
 
